தொடரும் வடமாநில இளைஞர்களின் அடாவடி... நீண்ட தூர பயணம்.. ரூ.50 அதிகம் கேட்ட ஓட்டுநர் - அடுத்த நொடியே நடந்த பயங்கர சம்பவம்

x

சென்னை சென்ட்ரலில் இருந்து கட்டுமான பொருட்களுடன் ஆட்டோவில் ஏறிய வடமாநில இளைஞர்கள், கிழக்கு தாம்பரத்தில் உள்ள வணிக வளாகம் அருகே இறங்கியுள்ளனர். இதில், நீண்ட தொலைவின் காரணமாக வடமாநில இளைஞர்களிடம், ஆட்டோ ஓட்டுநர் 50 ரூபாய் அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், வடமாநில இளைஞர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வடமாநில இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வடமாநில இளைஞர்களை தடுத்து சிறைப்பிடித்ததில் ஒருவர் தப்பியோடியுள்ளார். இதில், ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனார்.


Next Story

மேலும் செய்திகள்