டி20 உலகக்கோப்ப: நெதர்லாந்து அணியிடம் தோல்வி... தொடரில் இருந்து வெளியேறியது தென்னாபிரிக்க அணி.! அரையிறுதியில் இந்திய அணி

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தென் ஆப்பிரிக்கா வெளியேறியது.
x

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நெதர்லாந்து வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசிக் கட்டத்தில் அக்கர்மேன் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறியதால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்கா எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவும் தகர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்