சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தை திடீரென்று தாக்கிய இஸ்ரேல்... விமான நிலையத்தில் இருந்தவர்களின் நிலைமை?

x
  • இஸ்ரேல் படைகள் சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சிரியா - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
  • ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் சிரியாவில் உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டும் நிலையில், சிரியா அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
  • இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
  • இதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது.
  • ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

Next Story

மேலும் செய்திகள்