தொங்கு பாலம் விபத்து பிரதமர் மோடி இன்று ஆய்வு | morbibridge | gujarat | pmmodi

x

தொங்கு பாலம் விபத்து பிரதமர் மோடி இன்று ஆய்வு

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான மோர்பி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்யவுள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில், தொங்கு பாலம் அறுந்து, ஆற்றுக்குள் விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாலம் விழுந்து விபத்துக்குள்ளான மோர்பி பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்