வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் - பரபரப்பான சென்னை | Koyambedu | Threat |

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் கட்டுப்பட்டு அறையை, காலை பதினொன்று 20 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், 11 மணியளவில் பிளாட்பார்ம்-1ல் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பேருந்து நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்