அதிமுக விதிகளில் திருத்தம்..! - ஈபிஎஸ்-ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு... - உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

x
  • அதிமுக விதிகளில் திருத்தம் தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
  • இது தொடர்பான மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது, மனுதாரர் கே.சி. பழனிசாமி தரப்பில், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
  • இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனு தள்ளுபடி செய்யும் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
  • இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், கே.சி. பழனிசாமியின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்