நண்பனின் சடலத்தின் மீது அமர்ந்து அமானுஷ்ய பூஜை... அகோரி சாமியாரின் வினோத பூஜையால் மிரண்ட மக்கள்...

x

பிணமாக கிடந்தவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணமாகியிருக்கிறது. கடந்த 2 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பிரிவுக்கு காரணம் மணிகண்டனின் குடிப்பழக்கமும், காதலியுடனான தகாத உறவும் என்று சொல்லப்படுகிறது. கல்யாணத்திற்கு முன்பு இருந்த காதல், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்திருக்கிறது.மனைவியை பிரிந்த மணிகண்டனை சில நாட்களுக்கு பிறகு காதலியும் கைகழுவி இருக்கிறார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த தகவல் அகோரி மணிகண்டனுக்கு தெரிந்திருக்கிறது. அகோரி மணிகண்டனும் இறந்த மணிகண்டனும் பாலிய நண்பர்கள். பேருக்கு ஏற்றார்போல் இருவரும் ஒன்னுமண்ணாய் வளர்ந்திருக்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் அகோரி மணிகண்டனிடம் இறந்துபோனவர் சிஷ்யனாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நண்பனின் இறங்கல் செய்தி கேட்டு திருச்சியில் இருந்து தனது பரிவாரங்களுடன் சூலூர் மின்மயானத்திற்கு வந்திருக்கிறார் அகோரி மணிகண்டன். அங்கே உடுக்கை முழங்க நண்பனின் சடலத்தின் மீது ஏறி சம்மனம் போட்டு அமர்ந்து காலபைரவ பூஜையை நடத்தியுள்ளார்.

பிறகு ஈமச்சடங்குகளை செய்து சுடுகாட்டையே அதிரவைத்திருக்கிறார். பிணத்திற்கு நடத்தப்படும் இந்த பூஜையால் தற்கொலை செய்து கொண்ட ஆன்மா பூவுலகில் சுற்றி திரியாமல், சிவலோக பதவி அடையும் என்று சொல்லப்படுகிறது திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் காசியில் இது போன்ற சித்து வேலைகளை கற்று வந்து திருச்சியில் ஒரு கோவிலை கட்டி பூஜை செய்து வருகிறார். ரத்தக்காவு, நள்ளிரவு பூஜை, என அகோரி மணிகண்டனின் வழிபாடுகள் ஒவ்வொன்றும் விசித்திரமானது. விளங்கி கொள்ள முடியாத அந்த விசித்திரத்தையும் அமானுஷ்யத்தையும், உண்மை என நம்பி ஒரு கூட்டாம் அவரை சுற்றி வருவதை பார்க முடிகிறது.


Next Story

மேலும் செய்திகள்