ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

x

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 5 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் 27, மே 4,11,18 மற்றும் 25 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் காலை 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28, மே 5,12,19 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் இடையே ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை குறிப்பிட்ட 11 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல் திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே மே மற்றும் ஜூன் மாதங்களில் குறிப்பிட்ட 9 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்திலும் அதே நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்