பயிர் கடன் பெறாதவர்களுக்கும் பெற்றதாக சம்மன்.. அதிர்ச்சியில் விவசாயிகள்

x

தெற்குப்பட்டியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினர்களாக கூட இல்லாத விவசாயிகள் 244 பேருக்கு பயிர் கடன் பெற்றதாகவும், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டம் போதாவூரைச் சேர்ந்த தவசு என்பவர், 2020ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், 2022இல் கடன் வாங்கியதாக சம்மன் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குளித்தலையில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, போலி ஆவணங்கள் மூலம் பயிர் கடன் பெற்றவர்கள், அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்