கொளுத்தும் கோடை வெயில்... பீருக்கு எகிறும் மவுசு... புதுச்சேரியில் புது சாதனை

x

புதுச்சேரியில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பீர் விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பீர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுச்சேரியில் விற்பனையாகிறது. கோடை வெப்பம் காரணமாக, மதுப்பிரியர்கள் தற்போது பீரையே நாடுகின்றனர். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் பீரையே விரும்புகின்றனர். வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும் நிலையில், தற்போது இரண்டரை லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்