கணவர் இறந்த அன்றே பிரிந்த மனைவியின் உயிர் - இறப்பிலும் தொடரும் அன்பு...

x
  • கோவையில் விசைத்தறி சங்கத் தலைவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் பழனிச்சாமி.
  • இவர் விசைத்தறி தொழிலாளர்களின் உரிமைக்காகவும், அவர்களுக்கான இலவச மின்சாரத்தை பெற்று தரவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
  • சில நாட்களாக வயது மூப்பினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
  • . இதையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கருப்பாத்தாளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்