கைதிகள் மூலம் விளைவிக்கப்பட்ட செங்கரும்பு.. ஆவலுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்...

x

கைதிகள் மூலம் பயிரிடப்பட்ட ஒரு கட்டு கரும்பு150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி மத்தியச் சிறையில் தண்டனை கைதிகள் உட்பட, 1,800 பேர் உள்ளனர். சிறை வளாகத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பில், கைதிகளை கொண்டு காய்கறிகள் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

கடந்தாண்டு இரண்டு ஏக்கரில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டது. வெளிச்சந்தையில் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிறைவாசிகளின் கரும்பு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறை அங்காடியில் இக்கரும்புகள் பொதுமக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்