கண்முன்னே தீயில் கருகிய கரும்புகள் - பயிரை பார்த்து கதறி அழுத விவசாயி

x
  • தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் தீயில் எரிந்து சேதமாகின.
  • சாய் நகரைச் சேர்ந்த விஜயகுமார், தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
  • இந்நிலையில், அவர் கிணற்றில் இருந்த மின் மோட்டாரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு, அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
  • மளமளவென பரவிய தீ தோட்டம் முழுவதும் பரவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்.
  • இருப்பினும் கரும்பு பயிர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்போது கரும்பு பயிரை உரிமையாளர் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Next Story

மேலும் செய்திகள்