"வேலைக்கு சென்ற இடத்தில் சித்திரவதை அனுபவிக்கிறேன்... என்னை காப்பாற்றுங்கள்" - இளைஞரின் கண்ணீர் கோரிக்கை

x

வேலைக்கு சென்ற இடத்தில் தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும் , தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் குவைத் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் - கொளஞ்சியம்மாள் தம்பதியின் இளையமகன் ரகுபதி. இவர் கடந்த ஆகஸ்ட் 15 தேதி குவைத் நாட்டிற்கு ஓட்டுநர் வேலைக்கு ஏஜெண்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஓட்டுநர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய சொல்லி கொடுமை படுத்துவதாக வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார் . மேலும் சமூக வலைதளங்களில் தன்னை கொடுமை படுத்துவதாகவும் , உணவு கொடுக்காமல் சித்தரவதை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மத்திய, மாநில அரசு தன்னை காப்பாற்ற வேண்டும் என வீடியோ மூலம் ரகுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்