"சூரறைப் போற்று படத்தை இயக்கும் முன் சந்தேகமாக இருந்தது" - சுதா கொங்கரா பகிர்ந்த ரகசியம்

x

மாறுபட்ட கதையில் சூரைரைப் போன்று படம் உருவானதால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது என, இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'சூரரைப் போற்று ' திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்ற நிலையில், படத்தின் சிறப்பு காட்சி சென்னை பாடியில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சுதா கொங்கரா, ஆஸ்கருக்கு தேர்வாகாவிட்டாலும் இந்தியாவின் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என, கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்