திடீரென ரயிலின் சக்கரங்கள் கழன்றதால் சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

x

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் சரிசெய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்