திடீரென பற்றியெரிந்த வீடு..! - தூக்கத்திலேயே உடல்கருகி இறந்த குழந்தைகள்... மொத்த குடும்பமுமே தீக்கிரையான சோகம்...

x

தெலுங்கானா மாநிலம் மஞ்ரியலா மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் இருந்த சிவையா என்பவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விசாரணையில், சிவையா மற்றும் பத்மா என்பவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், அவர்களின் வீட்டிற்கு உறவினர்கள் இரு குழந்தைகளுடன் வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அனைவரும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்களை மீட்ட போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்