திடீரென வெடித்த மண்ணெண்ணெய் அடுப்பு ! மனைவியை காப்பாற்ற முடியாத தீயணைப்பு அதிகாரி...

x

ஆரணியில், தீயணைப்பு துறை அலுவலர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தீயணைப்பு துறையில் துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி, வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஜெயலட்சுமி உயிரிழந்த நிலையில், அவரது கணவர் சரவணன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்