திடீரென வீடுகளில் விரிசல்...பதறி போன மக்கள் - நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கோக்குடல் கிராமத்தில், சாலை மற்றும் வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலைகளிலும், சில வீடுகளிலும் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து ஆய்வு மேற்கொண்ட துறை சார்ந்த அதிகாரிகள், நிலத்தடியில் நீர் சென்று கொண்டிருப்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன் மண் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்