திடீரென்று ஓடிகொண்டிருந்த கார்கள் மீது விழுந்த ராட்சத மரம்...அலறிய மக்கள்...வெளியான சிசிடிவி காட்சி

x

சென்னை அண்ணா நகரில், சாலையில் சென்ற சொகுசு கார்கள் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அண்ணா நகரில் பழமையான மரம் ஒன்று முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, சொகுசு கார்கள் மீது ராட்சத மரம் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்