ஒரே நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் - பரபரப்பில் செவிலியர் கல்லூரி

x

கர்நாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 137 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் மாணவர்கள் சாப்பிட்ட உணவை கைப்பற்றி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் மாலை வரை அவர்கள் சிகிச்சையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்