அதிமுக வழக்கில் திடீர் திருப்பம்..

x

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் ஐந்தாவது நாளாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது இருதரப்பும் வாதங்களை முன் வைத்தனர். வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்