நடுக்கடலில் வீசிய திடீர் புயல் - சிக்கி தவித்த இந்திய மீனவர்கள்... நண்பனாக வந்த அமெரிக்க கப்பல்

x

புயலின் போது, நடுக்கடலில் சிக்கித்தவித்த தேங்காய்பட்டணம் மீனவர்களை, இலங்கை மீனவர்கள் காப்பாற்றிய நிலையில், அமெரிக்கா கப்பலின் உதவியுடன், 2 மாதங்களுக்கு பின் விளிஞ்ஞம் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 15 மீனவர்கள், ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். டிக்கர்கோசியா தீவை அடுத்த சாலோமோன் என்ற தீவு பகுதியில் மீன்பிடித்துக்

கொண்டிருந்த போது, படகின் கியர்பாக்ஸ் திடீரென பழுதாகி படகு இயக்க முடியாது நிலை ஏற்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை மீனவர்கள் அவரை மீட்டனர்.

பின்னர் அமெரிக்கா கப்பலின் உதவியுடன், 2 மாதங்களுக்கு பின் விளிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்