கொளுத்தும் வெயிலில் தகித்த தமிழகத்தை குளுகுளுவென மாற்றிய மழை.. குஷியில் மக்கள்..!

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. நயினார் பாளையம், பாண்டியகுப்பம், மரவனத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்