பழனி ரோப் காரில் திடீர் மின்தடை - 2 நிமிடம் அந்தரத்தில் இருந்த அமைச்சர் பிடிஆர்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றார்.

அங்கிருந்து, ரோப் காரில் ஏறி கீழ் இருந்து மலைக் கோவிலுக்கு புறப்பட்டார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகள் சென்றனர்.

அப்போது திடீரென அங்கு மின் தடை ஏற்பட்டதால், ரோப் கார் பாதி வழியில் அந்தரத்தில் நின்றது.

2 நிமிடங்கள் நடுவழியில் அந்தரத்தில் ரோப்கார்கள் தொங்கியது.

இரவு நேரம் என்பதால் உயர் கோபுர விளக்கும் அணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், மீண்டும் மின் தடை சரியானதும், மலைக்கோவிலுக்கு சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சாமி தரிசனம் செய்துவிட்டு, ரோப்கார் வழியாக கீழே இறங்கி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்