நடுவானில் விமானத்தில் திடீர் கோளாறு...158 பயணிகளின் கதி என்ன?- குவைத் டூ சென்னை விமானம்

x

குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 11:05 மணிக்கு பதில், நள்ளிரவு 11:51 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, குவைத்திற்கே திரும்பி சென்று, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாமதமாக விமானம் வரும் என அறிவிக்கப்பட்டதால், சென்னையில் பயணிகளை வரவேற்க காத்திருந்த‌வர்கள், விமான நிலையத்தில் தவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்