பைக்கில் சென்றவருக்கு திடீர் மாரடைப்பு... நடு ரோட்டிலேயே சிபிஆர் - காவலருக்கு குவியும் பாராட்டு

x

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பைக்கில் சென்ற நபருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவலர் முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார்.

ஹனுமகொண்டாவில் ராஜு என்பவர் காப்பாற்றப்பட்ட நிலையில், உடனடியாக, போக்குவரத்து காவலர் சுவாமி அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜு உடல்நிலை தேறி வருகிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து போலீசாருக்கும் சிபிஆர் சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிகின்றது.


Next Story

மேலும் செய்திகள்