பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து - இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டிடம் | Sattur

x

சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமானது. விருதுநகர் மாவட்டம் ஒத்தையால் பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதனிடையே ஆலையின் உரிமம் காலாவதியானதால், உரிமத்தை புதுப்பிப்பதற்காக பட்டாசு ஆலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பட்டாசு மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்த நிலையில், பணிகள் நடைபெறாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்