திருச்செந்தூர் கோயிலில் திடீர் பரபரப்பு.. திடுதிடுவென உள்ளே ஓடிய பக்தர்கள் - பகீர் காட்சி

x

திருச்செந்தூர் சுப்பிரணியசுவாமி கோயிலுக்குள் செல்வதற்காக, போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு 100-க்கும் மேற்பட்ட பாத யாத்திரை குழுவினர் உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகாசி விசாக விழா இன்று நடைபெறுவதையொட்டி, சென்னை , கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளிவிலான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்றிரவு கோயில் நடை சாத்தப்படும் முன்னர், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தடுப்பு வேலிகளை தள்ளி விட்டு அத்து மீறி உள்ளே புகுந்தனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்