கோயிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி - பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

x

கும்பகோணத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன அதிபரான முரளிதரன், நாச்சியார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்