புழல் சிறையில் திடீர் நெஞ்சு வலி.. செல்லும் வழியிலேயே பிரிந்த உயிர்

x

புழல் சிறை விசாரணை கைதி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசன் என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்