நள்ளிரவில் சவுக்கு சங்கர் திடீர் மாற்றம்

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்றம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக காரணங்களுக்காக சிறை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய சிறைத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்