சூடான் போர் - வெள்ளை மாளிகை அதிரடி உத்தரவு

x

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவேண்டும் என வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. இந்த நிலையில் சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டும் என்றும் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்