உச்சக்கட்டத்தில் சூடான் போர் - இந்தியாவுக்கு உதவிய ஃபிரான்ஸ் | Sudan | India | France |

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பிறநாட்டினரை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சூடானில் சிக்கியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கித்தவிக்கும் 28 நாடுகளை சேர்ந்த 388 நபர்கள், பிரான்ஸ் நாட்டின் இரண்டு ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியர்கள் சிலரும் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com