தினத்தந்தி குழுமம் நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - குவிந்த +2 மாணவர்கள்

x

தினத்தந்தி குழுமம் நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை, திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் என்ன படிக்க வேண்டும், எதை படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்பது குறித்து பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். தினத்தந்தி குழுமம் நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம், பல்வேறு படிப்புகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு சிறந்த ஆளுமைகள் விளக்கம் அளித்ததாக, தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்