"தினத்தந்தி" நாளிதழின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - மாணவ- மாணவிகள் பங்கேற்பு

x
  • வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தினத்தந்தி நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
  • வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • பின்னர் பேசிய அவர், மாணவ- மாணவிகளுக்கு நம்பிக்கை என்பது சிறு வயதிலிருந்தே இருக்க வேண்டும் என்று கூறினார்.
  • கடினமான உழைப்பு மற்றும் ஒழுக்கம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வழிவகுக்கும் என்றும் நமக்கென ஒரு இலக்கை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
  • நிகழ்ச்சியில் பேசிய விஐடி வேந்தர் விஸ்வநாதன், தாம் தினத்தந்தி வாசகர் என்று
  • கூறி நாளிதழின் பெருமைகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ - மாணவிகள், தினத்தந்தி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்