பாதிரியார் செய்த லீலைகள்.. அடுத்தடுத்து வந்த பாலியல் புகார்கள்..

x
  • கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, இளம் பெண்கள் பலருடன் ஆபாசமாக எடுத்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்தநிலையில், குலசேகரத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
  • அதில், கடந்த 2022-ம் ஆண்டு பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கியதாகவும், ஆனால் தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, பாதிரியாரை ஒருநாள் போலீஸ்காவில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
  • அதில், குலசேகரத்தை சேர்ந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியதால் தொடர்பை துண்டித்ததாகவும் கூறியுள்ளார்.
  • பாதிரியார் ஆன்டோ இதே பாணியில் பல பெண்களுடன் நெருங்கி பழகி, தனது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்