ஹோட்டலில் மது அருந்திய மாணவர்கள்.. தட்டி கேட்ட ஊழியருக்கு விழுந்த அடி.. திரும்ப வந்த 15 பேர்..பரபரப்பு சம்பவம்

x

கேரளா மாநிலம், கொச்சியில், ஹோட்டலில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், ஹோட்டல் ஊழியர்களை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஹோட்டலுக்கு இரவு 10 மணிக்கு உணவருந்த வந்த மாணவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மதுபானத்தை குடிக்க முற்பட்டபோது, கடை ஊழியர்கள் தடுத்துள்ளனர். இதனால் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, வெளியே சென்ற மாணவர்கள், பின்னர் 15 பேருடன் திரும்பி வந்து, ஹோட்டல் ஊழியர்களை தாக்கி உள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் அளித்த புகார்ரின் பேரில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்