வீட்டிற்கு வந்ததும் மாணவன் மரணம்.. எமனாக மாறிய நண்பர்கள்? -விருதுநகரில் திகீர் சம்பவம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கல்லூரி மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மம்சாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிவராமகணேஷ், வெளியே நண்பர்களுடன் சென்று விட்டு, ரத்த காயங்களுடன் வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் அடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்....


Next Story

மேலும் செய்திகள்