அழகப்பா அரசு கல்லூரி விழாவில் டான்ஸ் ஆடும் போதே மாணவன் பலி.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்

x
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவன் ஆண்டு விழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
  • திருவாரூரைச் சேர்ந்த மாணவன் கோகுல், அங்குள்ள காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், கல்லூரி ஆண்டு விழாவில் சக மாணவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய கோகுல் திடீரென மயந்க்கி விழுந்துள்ளார்.
  • இதனையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  • அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
  • இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்