எஸ்எஸ்எல் சி தேர்வுக்கு செல்லும் முன் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத மாணவி..!
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் தந்தை உயிரிழந்த நிலையிலும், பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார். பெரிய மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது இரண்டாவது மகள் ஜெயலட்சுமி 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, மூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், ஜெயலட்சுமி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார். தேர்வுக்கு முன்பாக தந்தையின் உடலைப் பார்த்து மாணவி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story