எஸ்எஸ்எல் சி தேர்வுக்கு செல்லும் முன் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத மாணவி..!

x

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் தந்தை உயிரிழந்த நிலையிலும், பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார். பெரிய மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது இரண்டாவது மகள் ஜெயலட்சுமி 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, மூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், ஜெயலட்சுமி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார். தேர்வுக்கு முன்பாக தந்தையின் உடலைப் பார்த்து மாணவி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்