"வேலை நிறுத்த போராட்டம்.." - என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு | NLC

x

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், வரும் 25ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்