மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - துடிதுடித்து பலியான சோகம்

x

கண்ணூரைச் சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை காணாமல், அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து சற்று தொலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் தொடை பகுதியை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், சத்தம் போட முடியாமல் துடிதுடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்