வழி தவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகள் - சமூக ஆர்வலர்களின் மனிதநேயம் மிக்க செயல்

ராமநாதபுரத்தில் வழிமாறி வந்த அரிய வகையைச் சேர்ந்த 5 ஆப்பிரிக்க ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் பேருந்து பணிமனைக்கு பின்புறம் உள்ள தியேட்டர் அருகில், பகலில் தென் தெரியாததால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த அரிய வகை ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அந்த அழகிய ஆந்தைகளை மாவட்ட வனத்துறையிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com