கொத்தனார், சித்தாள், கடன் கொடுத்த பேங்க் எல்லார் பெயரும் பத்திரிக்கையில்... இணையத்தை கலக்கிய விநோத அழைப்பிதழ்

x

சென்னை அரக்கோணம் அருகே வித்தியாசமான பாணியில் அச்சடிக்கப்பட்ட புதுமனை புகுவிழா அழைப்பிதழ் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

பொதுவாக பத்திரிகைகளில் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் பெயர்களைப் போடுவது தான் வழக்கம்...

ஆனால் அரக்கோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரி காமராஜன் என்பவர் சற்றே வித்தியாசமான முறையில் புதுமனை புகுவிழா அழைப்பிதழை அச்சடித்துள்ளார்...

"பால் காய்ச்சப் போறோம்" என்ற தலைப்பில், வியர்வை சிந்தி உழைத்த அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் முதல் நிதி உதவி வழங்கிய வங்கியின் பெயர் வரை அச்சடிக்கப்பட்ட பத்திரிகை இணையத்தைக் கலக்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்