இஸ்லாமியர்கள் சென்ற பஸ் மீது கல் வீச்சு.. "ஜெய் ஸ்ரீராம்" என கூறுமாறு மிரட்டியதாக புகார்.. பரபரப்பு காட்சி.. ராஜஸ்தானில் அதிர்ச்சி

x

ராஜஸ்தானில் ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தை நோக்கி ஹஜ் யாத்ரீகர்கள் நிரம்பிய பேருந்து ஒன்று நேற்று இரவு பயணம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில், பேருந்தை திடீரென நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்த‌ததோடு, சில பயணிகள் மீதும் கற்கள் விழுந்தன. இதனால் பெண் பயணிகள் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. கற்களை வீசிய நபர்கள் பேருந்துக்குள் ஏறி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுமாறு மிரட்டியதாக, பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்