சிவசேனா ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல்....இடையூறுக்கு மன்னிப்பு கேட்டார் ஆதித்ய தாக்கரே

x

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே காரை மறித்து, ஊர்வலத்தில் சிலர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவுரங்காபாத் வைஜாபூர் பகுதியில் ஆதித்ய தாக்கரே ஊர்வலம் சென்றார். அப்போது, ராமாபாய் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடிய சிலர், ஆதித்ய தாக்கரே காரை மறித்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். மேலும், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இடையூறுக்கு மன்னிப்பு கேட்ட ஆதித்ய தாக்கரே, சிவ சக்திக்கும், பீம் சக்திக்கும் வேறுபாடு இல்லை என்றும், நாட்டுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்