மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 5 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பா.ஜ.க.வின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. இதில், படுகரின மொழியில் தனது உரையை எல்.முருகன் தொடங்கினார். பின்னர் பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் மலை மாவட்ட மக்கள் பயன்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் திரளாக பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்