முப்பெரும் தலைவர்கள் சிலை... "ராகுல் காந்தியை வைத்து தான் சிலை திறக்கப்படும்" - தனுஷ்கோடி ஆதித்தன்

x

நெல்லை மாவட்டம் பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர், ராஜீவ் காந்தி மற்றும் ஜி.கே மூப்பனார் முழு உருவ சிலையை, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், ராகுல் காந்தியை வைத்து திறக்கப்படும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார். சிலை அமைக்கப்பட்ட இடத்தை அவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரூபி மனோகரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பேசிய தனுஷ்கோடி ஆதித்தன், பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் தலைவர்கள் முழு உருவச் சிலையை ராகுல் காந்தியை வைத்து தான் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்