இரும்பு ராடால் குத்தி கொலை..மீன் பிடிக்க சென்றபோது தகராறு

x

மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், மனைவியின் பிறந்த நாளன்று கணவர் இரும்பு ராடால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அச நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு லாவண்யா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், தனது நண்பர்களுடன் கீழ்விதி ஏரியில் லாரன்ஸ் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள இளைஞர்களுக்கும் லாரன்ஸுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், இரும்பு ராடால் லாரன்ஸை குத்தி இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லாரன்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, அவருடையை மனைவி லாவண்யாவின் பிறந்த நாளான நிலையில், தனது பிறந்த நாளான்று கணவரை பறிகொடுத்து லாவண்யா கதறி அழுதது காண்போரை சோகத்தில் மூழ்கடித்தது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்